29 Juni 2020

சபாபதிப்பிள்ளை தியாகராஜா

M. S. Thiyagarajah
தியாகராஜா ஆத்தியடி, பருத்தித்துறையைப் பிறப்பிடமாகக் கொண்டவர்.

புகையிரதநிலைய அதிபராக இலங்கையின் பல்வேறு பாகங்களிலும் கடமையாற்றியவர்.

இவர்
சபாபதிப்பிள்ளை, இலட்சுமிப்பிள்ளை தம்பதிகளின் மூத்த புதல்வன்

சிவகாமசுந்தரியின் அன்புக் கணவர்

ஆறுமுகம், விசாலாட்சி தம்பதிகளின் மருமகன்

யோகேஸ்வரி குமாரசாமி, தில்லைமுருகராசா, கோகுலராசா (ஜேர்மனி), பரமகுரு ஆகியோரின் சகோதரர்

ஆறுமுகம் குமாரசாமி, சரஸ்வதி பரமகுரு ஆகியோரின் மைத்துனர்

Childrens:
Premarajan - (S. T. Premarjan - பிறேமராஜன்)
Chandravathanaa - (சந்திரவதனா)
Parthiparajan - (பார்த்திபராஜன் - பார்த்திபன்)
Chandrakumary - (சந்திரகுமாரி - சந்திரா இரவீந்திரன்)
Chandrapraba - (சந்திரபிரபா - பிரபா)
Paratharajan - (பரதராஜன் - பரதன் -  மொறிஸ்)
Balasabapathy - (பாலசபாபதி - சபா - மயூரன்)
Kumaraybhama - (பாமா)

Grandchildren: 
Janagan, Khawshikan, Thaksahyini, Parathan
Thileepan, Theepa, Thumilan
Morris, Krishnarathai
Tharaniyan, Rishiyan, Tharschiya
Bahinthusha, Mayuran, Sivagami
Sayandan, Sayani, Sankeedan

28 Juni 2020

VELMURUGU ­ SEETHADEVI

VELMURUGU ­ SEETHADEVI    

wife of late D.S. Velmurugu of Arthiady Point Pedro 

loving mother of Kamaladevi, Susiladevi, Mathivanar 

mother­in­law of Dr Thigarajah, Ramachandran, Ranjini. 

Cortege leaves  Barney Raymond Funeral Parlour for Cremation at 2.00 p.m. Saturday 03rd May General Cemetery, Kanatte. (03.05.2003)

27 Juni 2020

சிதம்பரப்பிள்ளை தவசீலன்

Thavaseelan
மருத்துவ சேவைக்காக ஆஸ்திரேலிய அரசின் விருது பெறும் தமிழ் மருத்துவர் சிதம்பரப்பிள்ளை தவசீலன்

அவுஸ்திரேலியாவின் NSW மாநிலத்தில் வாழும் மருத்துவர் தவசீலன் (Dr Sithamparapillai Thavaseelan) அவர்கள் தான் பணியாற்றும் மருத்துவத்துறையில் செய்யும் சேவைகளுக்காகவும், மருத்துவம் சார்ந்த கல்விகற்பித்தலுக்காகவும் Queen’s Birthday 2020 Honours List யில் இடம்பெற்று அரசின் Order of Australia எனும் மதிப்புமிகு விருதை நேற்று முன்தினம் (8 June 2020) பெற்றுள்ளார்.

Dr Seelan qualified from University of Sydney and completed FRACGP. He obtained additional qualifications such as Diploma of Child Health from University of Sydney and Master of Public Health & Tropical Medicine from James Cook University, Queensland. பருத்தித்துறை, ஆத்தியடியைப் பிறப்பிடமாகக் கொண்டவர்.

அவரின் சேவைப் பின்னணி இது:
* Bridgeview Medical Practice-இன் நிறுவன இயக்குனர்; GP-ஆக பணியாற்றுகிறார்.
* இலங்கையில் தன்னார்வ மருத்துவராக பலதடவைகள் பணியாற்றியுள்ளார்.
* 2003ம் ஆண்டு முதல் Fellowship Examination-இன் Examiner-ஆக பணியாற்றிவருகிறார்.
* Western Sydney University-இன் மருத்துவத்துறையில் Senior Conjoint Lecturer – மூத்த விரிவுரையாளராக கடந்த எட்டு ஆண்டுகளாக பணியாற்றிவருகிறார்.
* மருத்துவர்கள் GP-ஆக மாற பயிற்சி அளிக்கும் மருத்துவராக 2002ம் ஆண்டு முதல் பணியாற்றிவருகிறார்.
* Hartley College பழைய மாணவர்கள் அமைப்பின் தலைவராக 1998முதல் 2002வரை பணியாற்றியுள்ளார்.
* சிட்னி பல்கலைக்கழக தமிழ் சங்கத்தின் செயலாளராக 1994முதல் 2000வரை பணியாற்றியுள்ளார்.
* Australian Tamil Chamber of Commerce அமைப்பின் 2016ம் ஆண்டுக்கான Lifetime Achievement Award பெற்றவர்.
* • NSW and ACT, Royal Australian College of General Practitioners வழங்கிய Practice of the Year விருதை அவரது நிறுவனம் 2013ம் ஆண்டு பெற்றது.

வழக்கம் போலவே ஆஸ்திரேலியாவின் பன்முக கலாச்சாரத்தன்மையை இந்த வருட Queen’s Birthday விருது பட்டியலும் பிரதிபலிக்கிறது. இதன்படி முன்னாள் அரசியல்வாதிகள், விளையாட்டு வீரர்கள் மற்றும் சமூக தொண்டர்கள் என சுமார் 738 ஆஸ்திரேலியர்கள் Queen’s Birthday விருது பெறுவோர் பட்டியலில் இடம்பிடித்து அரசின் Order of Australia எனும் மதிப்புமிகு விருதை பெறுகிறார்கள். மேலும் 128 பேர் சிறப்பு விருது பெறுகிறார்கள்.

Order of Australia விருதை பெறுபவர்களில் பருத்தித்துறை, ஆத்தியடியைப் பிறப்பிடமாகக் கொண்ட Dr.சிதம்பரப்பிள்ளை தவசீலன் அவர்களும் ஒருவர் என்பதில் மிகுந்த மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறேன்.

OAM - Seelan
Dr. Thavaseelan on his Queen`s Birthday honour

முருகேசு யோகசம்பந்தர்


Murgesu Yogasampanthar
முருகேசு யோகசம்பந்தர் யாழ். பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வதிவிடமாகவும் கொண்டர். 

இவர்

காலஞ்சென்ற முருகேசு, யோகேஸ்வரி தம்பதிகளின் அன்புப் புதல்வரும், 

காலஞ்சென்றவர்களான யோகசுந்தரம், யோகசௌந்தரி, யோகராசா மற்றும் யோகரஞ்சிதம், யோகநாதன், காலஞ்சென்ற யோகரதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ரதி, நகுலேஸ்வரன், பகீரதி, இராஜரட்ணம், யோகேஸ்வரி, காலஞ்சென்ற சிவகுருநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

யோகிதா- மோகன், அருணன்- ஜோயி(Zoe), யோகாஞ்சலி- குகேசன், யோகாஞ்சனா, யோகினி- ரிச்சி(Richie), யோகானந்தி, பைரவி- சஜந்தன், வித்யாதரன், மயூரி ஆகியோரின் அன்பு இளையப்பாவும் ஆவார்.

அவர்கள் 05-06-2020 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

22 Juni 2020

Kantha Sithamparapillai

Mrs Kantha Sithamparapillai was born in Singapore to Mr Sivagurunathan and Mrs Manonmani of Thumpalai, Point Pedro. She was the third child amongst nine siblings, comprising 5 girls and 4 boys. She spent her early formative years in Singapore where her father taught Mathematics at the famed Raffles Institution.

Her idyllic life in Singapore was cut short by the advent of the Second World War and the Sivagurunathan family returned to establish new roots in a foreign isle Sri Lanka. Life initially was confusing and alien but they soon settled down. Kantha then married the young and debonair Mr Sithamparapillai of Arthiady in 1952. Theirs was a wedding to remember. The young couple soon settled to a life of domestic bliss. Soon their marriage was blessed with four beautiful children. Sithamparapillai was posted to Colombo to serve in his illustrious career in the Bank of Ceylon. Kantha was then left holding the fort- her husband returning home during weekends – once or twice a month. Their hectic life gradually settled when Sithamparapillai was posted to Jaffna and subsequently retired. Just when they were beginning to settle down, another war erupted – the civil unrest. This affected them badly and they were forced to migrate to Australia.

1988, saw another turning point in Kantha’s life – another big move, another foreign land. But this time supported by the love of her life and her loving children, she set out to make a life for her family and herself. She lived in Perth and Melbourne initially and finally settled down in Sydney in 1994.

Her unduly love will always be cherished by the people she leaves behind:
Beloved husband - Sithamparapillai
Children – Jeyaseelan, Jeyanthi & Thavaseelan
Daughters-in-law – Chandragowry, Shanthini
Grandchildren – Ahilan, Jeevan, Nilesh & Sanjula.

Birth : 7 April 1925
Death: 20 March 2010

18 Juni 2020

பரமு சிதம்பரப்பிள்ளை

Paramu Sithamparapillai
யாழ். பருத்தித்துறை புலோலி மேற்கைப் பிறப்பிடமாகவும், புலுமச்சிநாதிகுளம் மாங்குளத்தை வதிவிடமாகவும், கனடாவை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட பரமு சிதம்பரப்பிள்ளை அவர்கள் 15-06-2020 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற பரமு, பார்வதி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற தம்பிப்பிள்ளை, இராசமாணிக்கம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மகேஸ்வரி அவர்களின் பாசமிகு கணவரும்,

சிவதாஸ்(இலங்கை), பரமதாஸ்(ஜேர்மனி), சிவகங்கை(கனடா), சிவறஜனி(இங்கிலாந்து), சிவறமணி(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

வானதி(இலங்கை), பரிமளகாந்தி(ஜேர்மனி), விஜயசிறி(கனடா), யோகநாதன்(இங்கிலாந்து), விஜயநாதன்(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான வள்ளிப்பிள்ளை, நாராயணசாமி, இராசம்மா, தங்கம்மா மற்றும் செல்லம்மா(இங்கிலாந்து), இராசமாணிக்கம் (இங்கிலாந்து) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

அருளினி, அர்ச்ஜுன், அருண், அனூஜன், மாதுரி, அஜுதன், நிஷாந்தினி, பிரபாகரன், நிருபினி, சுகந்தன், அஜித்தன், அர்விந் ஆகியோரின் பாசமிகு பேரனும்,

ஆதவ், அஞ்சனா, சுகானா ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

பிறப்பு: 12.09.1927
இறப்பு: 15.06.2020

ஆத்தியடி

ஆத்தியடி இலங்கையின் வடபுலத்தில் யாழ் மாவட்டத்தில், வடமராட்சிப் பகுதியில் பருத்தித்துறை, மேலைப்புலோலியில் அமைந்துள்ள ஒரு சிறிய ஊர் ஆகும். இதன் எல்லைகளாக மேற்கே தம்பசிட்டி கிராமமும், கிழக்கே வினாயகமுதலியார் வீதியும், தெற்கே வடமராட்சி இந்து மகளிர் கல்லூரி வீதியும், வடக்கே கோணந்தீவும் அமைந்துள்ளன.

ஆத்தியடியின் வடக்கே ஒன்றரை மைல் தொலைவில்தான் இந்தியப் பெருங்கடல் அமைந்துள்ளது. நெடிதுயர்ந்த பனைகளின் இடைவெளிகளின் ஊடும், ஓட்டு வீடுகளின் முகடுகளின் ஊடும், ஓலைக்குடில்களை உரசிக் கொண்டும், ஹாட்லிக் கல்லூரி வீதியில் தவழ்ந்து கொண்டும் காற்று அள்ளி வரும் ஆர்பரிக்கும் கடலின் அலையோசை எப்போதுமே ஆத்தியடி மக்களின் வாழ்வோடு இணைந்த தாலாட்டு.

* அத்திமரம் ஒன்று இருந்ததினாலேயே அந்த ஊர் அத்தியடி என்ற காரணப்பெயரைப் பெற்று காலப்போக்கில் ஆத்தியடி என மருவியதாகச் சொல்வார்கள்.
* அத்திமரத்தில் பிள்ளையார் போன்ற உருவம் தெரிந்ததாகவும், அதிலிருந்து அவ்விடத்தில் கல் வைத்து கற்பூரம் கொழுத்தி வழிபட்டு வந்ததாகவும் காலப்போக்கில் அதுவே ஆத்தியடிப் பிள்ளையார் கோயிலாக வளர்ந்து விட்டதாகவும் சொல்வார்கள்.
* ஆத்தியடிப் பிள்ளையார் கோயில் பருத்தித்துறையில் அமைந்திருக்கும் குறிப்பிடத்தக்க கோயில்களில் ஒன்று.
* ஆத்தியடியில் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கம், உப அஞ்சல் அலுவலகம், காணி அலுவலகம்.. போன்றவை அமைந்திருப்பதால் அது ஒரு சிறிய நகரம் என்பது போன்றதான பிரமையை மற்றவர்க்கு ஏற்படுத்துவதுண்டு.
* இங்கு அரசடி, புதியாக்கணக்கன், வட்டப்பாதி... போன்ற சிற்றிடங்களும் உள்ளன. காணிகளின் பெயர்களைக் கொண்டே இந்த இடங்கள் உருவாகியதாகச் சொல்வார்கள்.
* இங்கு வாழ் மக்கள் ஓரளவு வசதி படைத்தவர்களாகவும், கல்வியில் மேலோங்கியவர்களாகவும், அரச தொழில்களைச் செய்பவர்களாகவுமே இருக்கிறார்கள். அதே நேரத்தில் புதியாக்கணக்கன், வட்டப்பாதி போன்ற இடங்களில் 1980 ம் ஆண்டுக் காலப்பகுதி வரை எள் ஆட்டும் தொழிலும் குடிசைக் கைத்தொழிலாக இருந்தது. நல்லெண்ணெய் வாங்குவதற்கும், ஆட்டுக்கு பிண்ணாக்கு வாங்குவதற்கும் பல்வேறு இடங்களில் இருந்தும் இங்கு மக்கள் வந்து போவார்கள்.

இங்குள்ள ஆலயங்கள்
* ஆத்தியடிப் பிள்ளையார் கோயில்
* முதலி பேத்தி அம்மன் கோயில்

ஆத்தியடியில் பிறந்த/வாழ்ந்த மாவீரர்கள்
* கப்டன் மொறிஸ்
* கப்டன் மயூரன்

ஆத்தியடியில் பிறந்த/வாழ்ந்த கலைஞர்கள்
* சந்திரா இரவீந்திரன்
* சோ. ராமேஸ்வரன்
* பிறேமராஜன் (தீட்சண்யன்)
* சந்திரவதனா செல்வகுமாரன்

சாதனை படைத்த ஆத்தியடி மக்கள்
* சிதம்பரப்பிள்ளை தவசீலன்

சபாபதிப்பிள்ளை தியாகராஜா

M. S. Thiyagarajah தியாகராஜா ஆத்தியடி, பருத்தித்துறையைப் பிறப்பிடமாகக் கொண்டவர். புகையிரதநிலைய அதிபராக இலங்கையின் பல்வேறு பாகங்களிலும்...