வல்லிபுரம்கமலநாதன்.( முன்னாள் பிரதி நகர பிதா. பருத்தித்துறை நகராட்சி மன்றம்) தும்பளையை பிறப்பிடமாகவும், ஆத்தியடியை வதிவிடமாகவும் கொண்டவர்.
இவர்
காலம் சென்ற வல்லிபுரம், நல்லம்மாவின் கடைசி மகனும்,
காலம் சென்ற பரமநாதன், வள்ளிமுத்துவின் அன்பு மருமகனும்,
காலம் சென்ற சிவநாயகியின் ஆருயிர் கணவரும்,
லண்டனை வதிவிடமாக கொண்ட இரமச்சந்திரன், காலம் சென்றவர்களான. இராமலிங்கம், மகாதேவன், பாலச்சந்திரன், பரிமேல் அழகன் ஆகியோரின் உடன்பிறந்த சகோதரனும்,
தயாளனின்(கனடா) அன்பு தந்தையும்,
சயந்தினியின் அன்பு மாமனாரும்,
புருஷோத், அத்விகாவின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவர் 17-06-2024 அன்று இறைவனடி சேர்ந்துள்ளார்.
அன்னாரது இறுதி கிரிகைகள் 18-06-2024 காலை 8மணியளவில்ஆத்தியடி இல்லத்தில் நடைபெற்று, சுப்பர் மடம் இந்துமயானத்தில் தகனம் செய்யப்படும்.
Keine Kommentare:
Kommentar veröffentlichen