18 Juni 2020

பரமு சிதம்பரப்பிள்ளை

Paramu Sithamparapillai
யாழ். பருத்தித்துறை புலோலி மேற்கைப் பிறப்பிடமாகவும், புலுமச்சிநாதிகுளம் மாங்குளத்தை வதிவிடமாகவும், கனடாவை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட பரமு சிதம்பரப்பிள்ளை அவர்கள் 15-06-2020 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற பரமு, பார்வதி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற தம்பிப்பிள்ளை, இராசமாணிக்கம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மகேஸ்வரி அவர்களின் பாசமிகு கணவரும்,

சிவதாஸ்(இலங்கை), பரமதாஸ்(ஜேர்மனி), சிவகங்கை(கனடா), சிவறஜனி(இங்கிலாந்து), சிவறமணி(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

வானதி(இலங்கை), பரிமளகாந்தி(ஜேர்மனி), விஜயசிறி(கனடா), யோகநாதன்(இங்கிலாந்து), விஜயநாதன்(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான வள்ளிப்பிள்ளை, நாராயணசாமி, இராசம்மா, தங்கம்மா மற்றும் செல்லம்மா(இங்கிலாந்து), இராசமாணிக்கம் (இங்கிலாந்து) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

அருளினி, அர்ச்ஜுன், அருண், அனூஜன், மாதுரி, அஜுதன், நிஷாந்தினி, பிரபாகரன், நிருபினி, சுகந்தன், அஜித்தன், அர்விந் ஆகியோரின் பாசமிகு பேரனும்,

ஆதவ், அஞ்சனா, சுகானா ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

பிறப்பு: 12.09.1927
இறப்பு: 15.06.2020

Keine Kommentare:

Kommentar veröffentlichen

சபாபதிப்பிள்ளை தியாகராஜா

M. S. Thiyagarajah தியாகராஜா ஆத்தியடி, பருத்தித்துறையைப் பிறப்பிடமாகக் கொண்டவர். புகையிரதநிலைய அதிபராக இலங்கையின் பல்வேறு பாகங்களிலும்...